கிரிக்கெட்

மொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே!!

Published

on

நேற்று நடைபெற்ற 12-வது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை அணி சூப்பராக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது.

189 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து எடுத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் சென்னை அணியின் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பதும் அந்த அணியின் ரன் ரேட் கிட்டத்தட்ட இரண்டு என்ற நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய மொயின் அலி மூன்று ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version