கிரிக்கெட்

220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!

Published

on

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 221 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி முதல் 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்துவிட்டது. ஆனால் அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் அதிரடியாக விளையாடினார்கள். அதன் பின்னர் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியதால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

இருப்பினும் சென்னை அணியினர்களின் அபாரமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version