விளையாட்டு

பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

Published

on

இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் நேர்த்திக்கடன் செலுத்த பழனிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் சார்பாக ஆஸ்திரேலியாவில் வலைப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்றார் தமிழக வீரர் நடராஜன். ஆனால், எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலேயே சர்வதேச அளவிலான ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் அறிமுகம் ஆனார்.

ஒரே சுற்றுப்பயணத்தில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் நடராஜன். சமீபத்தில் நாடு திரும்பிய நடராஜன் பழனிக்குச் சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். குடும்பத்துடன் சென்று சாமி தரிசனத்தை முடித்த நடராஜன் ட்விட்டரில் ‘ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version