இந்தியா

தீபாவளிக்குப் பட்டாசு விற்க வெடிக்கத் தடை.. அதிர்ச்சியில் தமிழர்கள்!

Published

on

கர்நாடகாவில் தீபாவளிக்குப் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை என உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தீபாவளியின் போது இவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கும். தமிழக- கர்நாடக எல்லையான ஓசூரில் அதிகளவில் பட்டாசுக் கடைகள் அமைந்திருக்கும்.

இப்படி திடீரென பட்டாசு வெடிக்க மற்றும் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள், வியாபாரிகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version