தமிழ்நாடு
தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த கட்சி: தொண்டர்கள் கொண்டாட்டம்
தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த கட்சியை குறித்த தகவல் சற்று முன் வெளியானது. தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில் காலை முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் வரை திமுக கூட்டணி 150 இடங்களிலும் அதிமுக கூட்டணி 83 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகளும் வரத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் முதல் வெற்றியை சிபிஎம் பதிவுசெய்துள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதாகவும் அந்த தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது