இந்தியா

மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கோவிட் நோயாளி!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவருக்கு மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

முந்தைய நாள்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு நேற்று மாலை தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும் மருத்துவர்கள் கூறினர். கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மருத்துவமனையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை மருத்துவமனை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version