இந்தியா
கோவிட்-19 எதிரொலி பெங்களூருவில் புதிதாக 9 தகனக் கட்டிடங்கள்!
![New crematoriums in Bengaluru - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/08/New-crematoriums-in-Bengaluru.jpg)
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் கோவிட்-19 தொற்றும் வேகமாக தற்போது அதிகரித்து வருகிறது.
எனவே ஒரு நாளைக்கு 90 நபர்கள் விதம் பெங்களூருவில் இறந்து வருகின்றனர். அதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 தொற்று பாதிப்பில் இறந்தவர்களாக உள்ளனர்.
எனவே ஏற்கனவே உள்ள தகனக் கூடங்களில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க புதியதாக பெங்களூரூவில் 9 தகனக் கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பெங்களூரு நகர ஆணையர் என்.மஞ்சுநாத பிரசாத் தெரிவித்துள்ளார்.