சினிமா செய்திகள்
ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி!
நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபேஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமிதாப் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஐஷ்வர்யா ராய் உடல் நிலை சீராக இல்லை, எனவே மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று பிடிஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐஷ்வர்யா ராய் உடன் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மகள் ஆராத்யாவுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.