தமிழ்நாடு

மணிகண்டனை காவலில் எடுக்க அனுமதி மறுப்பு: போலீசார் அதிருப்தியா?

Published

on

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி வந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் தற்போது சைதாப்பேட்டை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டுமென்று அடையாறு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். மணிகண்டனை விசாரணை செய்ய ஐந்து நாட்கள் அவரை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அடையாறு காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு இருந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மணிகண்டன் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version