சினிமா செய்திகள்
‘ஜெய்பீம்’ விவகாரம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
‘ஜெய்பீம்’ விவகாரம் தொடர்பாக சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களே இரண்டு பக்கத்திற்கு இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் தங்கள் சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக வன்னியர் சமூகத்தினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரித்த நிலையில் இன்னும் ஐந்து வேலை நாட்களில் புகாரின் அடிப்படையில் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.