சினிமா செய்திகள்
சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு
சம்பள பாக்கி விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது .
பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை .
இந்நிலையில் இந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கவில்லை என்றும் ரூபாய் 4 கோடி சம்பள பாக்கி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமின்றி தற்போது ஞானவேல்ராஜா தயாரித்து வரும் திரைப்படங்களையும் வெளியிடுவதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சம்பள பாக்கி விவகாரம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் மூன்று படங்களை வெளியிட தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.