இந்தியா

லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை… நீதிமன்றம் தீர்ப்பு….

Published

on

பிகாரின் முன்னாள் முதலமைச்சர் மாட்டுத்தீவன வழக்கில் சிக்கினார். இவர் மீது 5 மாட்டுத்தீவன ஊழல் புகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டது.அதில் 4 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி சில நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமின் பெற்று வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 5 வது வழக்கிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 வருட சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் அவர் சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு லல்லு பிரசாத் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version