தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவை காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி: எத்தனை நாள் தெரியுமா?

Published

on

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிவசங்கர் பாபா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பின்னர் குணமாகியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்றம் சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்தும் இந்த விசாரணைக்கு பின்னர் மீண்டும் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version