தமிழ்நாடு

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Published

on

பிரபல தமிழ் வில்லன் நடிகர் மற்றும் அரசியல்வாதி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருவார் என்பதும் சில சமயம் அவரது கருத்துக்கள் பெரும் சிக்கலை ஏற்படுத்தி அவர் மீது வழக்குகள் பாய்ந்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவருடைய வீட்டை திடீரென சீல் வைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் மன்சூரலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து கட்டியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மன்சூர் அலிகான் தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகான் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்தார் என்பதும் அதன் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் போட்டியிட்டு 100க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version