இந்தியா
அதிர்ச்சி.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி!
![Coronavirus 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/Coronavirus-1.jpg)
இந்தியாவில் முதல் முறையாக, சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் குடும்பம், ரயில் மூலம் பீகார் சென்று வந்துள்ளனர்.
அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சல் இருப்பதை உறுதி செய்துள்ளனர். உடனே கொரோனா வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில், அந்த சிறுமிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. முன்னதாக அந்த சிறுமிக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுள்ளவர்களைத் தாக்கினால் காப்பாற்றுவது கடினம் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பாகவும், பயணம் செய்யாமல் இருக்காம்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.