வணிகம்
மகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி!
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து பண புழக்கத்தை அதிகரிக்க, ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற வங்கி கடன் திட்டங்களின் வட்டி விகிதம் எல்லாம் இதனால் குறையும்.
ஆனால், வாடிக்கையாளர்கள் வங்கிகள் வைத்துள்ள சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைந்து லாபமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக வங்கிகளிடம் ஆர்பிஐ பெற்ற கடனை, திருப்பி செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளனர். இதனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது.
முக்கிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள்:
1) கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கவனித்து வருகிறோம்.
2) வீட்டுக்கடன், வாகன கடன் திட்டம் போன்றவை மீதான வட்டி விகிதம் குறைப்பு.
3) ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு.
4) ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக குறைப்பு.
5) பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வரையில் செயல்பட்டு வருகிறோம்.
6) பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
7) ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிதத்திலிருந்து 4 சதவீதமாக குறைப்பு.
8) உலக அளவிலான பொருளாதார வலர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சரிவு என கணிப்பு.
9) பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தும்.
10) தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டியும் குறைய வாய்ப்பு.
11) வட்டி குறைப்பு காரணமாக, மாத தவணைகளின் தொகையும் குறையும்.
12) ஆர்பிஐ ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.