இந்தியா

உஷார்.. புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு..!

Published

on

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு நேர ஊடரங்கு மட்டும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.

சென்ற ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

Trending

Exit mobile version