தமிழ்நாடு
அதிர்ச்சி.. தமிழகத்தில் 10 வயதுக்குள் 31 சிறுவர்களுக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,173 பேரில், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 31 நபர்கள் என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருப்பூரில் 18, கரூரில் 15, சென்னையில் 9, கோவையில் 7, விருதுநகரில் 6, நாகையில் 5, வேலூர், சிவகங்கை, திருவள்ளூரில் தலா 4, ராமநாதபுரம் 3, செங்கல்பட்டு, தூத்துக்குடியில் தலா 2, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் 1 குழந்தைகள் என 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் 11 பேர் இறந்துள்ளனர். 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.