இந்தியா
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்: மத்திய சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு!
![coronavirus-5015328-1920-1-1679137301 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/coronavirus-5015328-1920-1-1679137301.jpg)
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. முக கவசம் அணிவது மற்றும் தனிமனித விலகலை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார்.
இதில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவும் , கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தி உள்ளார்.