இந்தியா
கொரோனா தடுப்பூசி கட்டாயமா? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பேருந்து, இரயில்கள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதே தவிர கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று கூறினார்.
100% அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மத்திய அரசு தற்போது கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல என்று கூறியிருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.