தமிழ்நாடு
முன் எப்போதும் இல்லாத உச்சம்: தமிழகத்தில் சுமார் 8,000 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனாவால் சிகிச்சைப் பெற்று 4,176 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 29 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டில் 58,097 பேர் கொரோனாவுக்காக தமிழகத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இருப்பதிலேயே சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 2,558 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. மிகக் குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது.