இந்தியா

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Published

on

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

#image_title

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழாக இருந்து வந்தது. இது தற்போது மீண்டும் 1000-ஐ தாண்டி மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை தலைமைச் செயலகத்தில் நேன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

seithichurul

Trending

Exit mobile version