சினிமா செய்திகள்
கொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்!
அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது மட்டுமல்லாமல், அவரது பங்களாக்களில் வேலை பார்த்து வந்த 30 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடக்கத்தில், முதல் பொது முடக்கத்தை கடைப்பிடிக்கும் போது வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் பொது முடக்கத் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் இழந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், பணிக்குச் சென்றனர். தற்போது இது போன்று பங்களாக்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.