தமிழ்நாடு

சென்னை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்: சிறப்பு அதிகாரி சித்திக்

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்னை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் சுனாமி போல் கொரோனா பரவி வருவதாகவும் சென்னை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறப்பு அதிகாரி சித்திக் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு இன்னும் ஒரு சில நாட்கள் சோதனையான காலம் என்றும் சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சிறப்பு அதிகாரி சித்திக், சென்னையில் சுனாமி போல் கொரோனா பரவி வருகிறது எனக் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version