உலகம்

கொரோனா 2.0 இன்னும் கொடூரமானதாக இருக்கும்- உலக சுகாதார நிறுவனம்

Published

on

கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளார்கள். 90 மில்லியனும்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கொரோனா 2.0 பாதிப்பு அதிகப்படியாக வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச அளவில் பண்டிகை காலம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து உள்ளதால்தான் அடுத்த கட்டம் கடினமானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளிலும் மக்கள் விடுமுறைக் காலத்தால் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், அடுத்து ஐரோப்பா நாடுகளில் இருந்தே கொரோனா தொற்று அதிகப்படியாக பரவும் என எச்சரிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version