டிவி

‘உங்களால மட்டுந்தான் நான் இங்க வர வந்திருக்கேன்’- சிவகார்த்திகேயனிடம் உருகிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்

Published

on

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ள நடிகர் அஸ்வின் தனது திரைப் பயணத்துக்கான முன்னுதாரணமே சிவகார்த்திகேயன் தான் என மனம் உருகி பேசியுள்ளார்.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. இதில் கடுமையான போட்டியாளராக அஸ்வின் வலம் வருகிறா. இந்த நிகழ்ச்சியின் பொங்கல் சிறப்புக்காக நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்டார். ஒவ்வொரு குக் மற்றும் கோமாளியையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும், அஸ்வின் மிகவும் ஸ்மார்ட் ஆக இருப்பதாகவும் சிவா தெரிவித்தார். அதற்கு அஸ்வின், “என்னோட சினிமா வாழ்க்கையில் நா இவ்ளோ தூரம் வந்து நிக்கிறேனா அதுக்கு முதல் காரணம் நீங்கதான். நான் சினிமாக்காக சென்னை ஓடி வந்த போது நா சந்திச்ச முதல் பிரபலம் நீங்கதான். நீங்க கொடுத்த டிப்ஸ் மற்றும் வழிமுறை தான் நான் இங்க நிக்க காரணமே” என தன்னுடைய முதல் சந்திப்பு குறித்து அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஸ்வின் சிவகார்த்திகேயநை சென்னையில்  உள்ள மால் ஒன்றில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எதேர்ச்சையாக சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version