தமிழ்நாடு
ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: சென்னை காவல்துறை ஆணையர் நடவடிக்கை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பியும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ ராசா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஆ ராசா, ‘நல்ல உறவில் சுகப்பிரசவமாக பிறந்தவர் முக ஸ்டாலின் என்றும், கள்ள உறவில் குறை பிரசவமாக பிறந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் பேசினார்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த புகார் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆ ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதி மீறல் மற்றும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.