இந்தியா
காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார்.
கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார்.
அகமது பட்டேல், சென்ற மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி அருகில் உள்ள குருகாம் பகுதியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவரின் உடல் உறுப்புகள் படிப்படியாகச் செயல் இழந்து, உடல் நிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் இன்று காலை அகமது பட்டேல் கலாமானார். இவரது இறப்பை அவரது மகன் ஃபைசல் பட்டேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் இருந்துவந்தார்.
அகமது பட்டேலின் இறப்புக்குக் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இறங்கள் தெரிவித்து வருகின்றனர்.