தமிழ்நாடு

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: கருப்பு ரிப்பன் கட்டி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Published

on

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#image_title

2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்திற்கு வெளியே கருப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, 2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றார்.

மேலும் உண்மைக்கு புறம்பான இந்த வழக்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நாங்கள் துடைத்தெறிவோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version