உலகம்

ஒத்தைக்கு ஒத்த.. மோடி, யோகியை நேரடியாக மோதும் பிரியங்கா.. காங்கிரஸ் மாஸ் திட்டம்!

Published

on

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக இப்படி ஒரு அரசியல் திருப்பத்தை எதிர்பார்த்து இருக்காது என்றுதான் கூற வேண்டும். பாஜக மட்டுமல்ல உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கிய மாநில கட்சிகளான சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இந்த அதிரடியை எதிர்பார்த்து இருக்காது என்றுதான் கூற வேண்டும்.

உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடத்தில் தேசிய அரசியலே பரபரப்பிற்கு உள்ளாகி உள்ளது.

உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக மாறியுள்ளார். 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசம்தான் லோக் சபா தேர்தலில் மிக முக்கியமான மாநிலம் ஆகும். அதில் 30 தொகுதிகள் வரை உத்தர பிரதேச கிழக்கு பகுதிக்குள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version