இந்தியா

டுவிட்டரை உண்மையிலேயே எண்ணெயில் போட்டு வறுத்தெடுத்த காங்கிரஸ் தொண்டர்கள்: வைரல் வீடியோ

Published

on

பொதுவாக ஒருவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றால் வறுத்து எடுத்தார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்மையிலேயே டுவிட்டரை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த புகைப்படங்களை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். இதனை அடுத்து அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டது என்றாலும் டுவிட்டர் மேல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்ட ஆத்திரம் தீரவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்கள் டுவிட்டர் லோகோவில் உள்ள பறவையை எண்ணெயில் வறுத்து எடுத்தனர்

ராகுல் காந்தி டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர் நிறுவனம் தவறு செய்துவிட்டதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டர் பறவையை எண்ணெயில் பொரித்து எடுத்து உள்ளதாகவும், இதை பேக் செய்து டெல்லியில் உள்ள டுவிட்டர் அலுவலத்திற்கு தபாலில் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்

மேலும் டுவிட்டர் பறவையை எண்ணெயில் பொரிக்கும் வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வினோதமான போராட்டம் குறித்த வீடியோ அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் பறவையை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்த இளைஞர் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஹர்ஷ குமாரின் மகன் என்று தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version