தமிழ்நாடு

இன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Published

on

திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றன. ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது 20 தொகுதிகளுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க திமுக முன்வரவில்லை என்றும் இந்த விஷயத்தில் திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 50 தொகுதிகள் வரை கேட்ட காங்கிரஸ் கட்சி, அதன் பின்னர் 40க்கு இறங்கி வந்து தற்போது 30 தொகுதிகள் கொடுங்கள் என்று கேட்டு வருவதாகவும் ஆனால் 20க்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று திமுக கறாராக சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலிலும் திமுக போட்டியிடும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் இதில் உடன்பாடு இல்லை என்றால் காங்கிரஸ் அதிரடி முடிவு எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version