செய்திகள்

ராஜேந்திர பாலாஜி மீது குவியும் மோசடி புகார்கள்.. மேலும் 3 பேர் புகார்…….

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணையின்போது தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் மனு மறுக்கப்பட்டதும் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தமிழக காவல்துறை 10 தனிப்படைகளை அமைத்தது. ஒருபக்கம், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் தலா ரூ.7 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார்கள் குவிந்து வருவதால் அவர் எப்படியும் சிறை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version