தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் காலமானார்!

Published

on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் சற்று முன் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிவந்த நிலையில் சற்று முன்னர் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவரது மறைவிற்கு தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தேசிய அரசியல்வாதிகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version