தமிழ்நாடு
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: ஆனாலும் பொதுமக்கள் நிம்மதி!
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதன் காரணமாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின் படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை கடந்த மாதம் விற்பனையான உருவாகி ரூ.915.50 என்ற விலையிலேயே இந்த மாதமும் விற்பனை ஆகும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களில் மிக அதிகமாக சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது