சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

Published

on

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கடந்த 1975 ஆம் ஆண்டு ’மாணவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் சிவாஜி கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பாண்டுவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய மனைவி குமுதா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version