சினிமா செய்திகள்

‘சூர்யா- 40’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலு..?

Published

on

சூர்யா 40 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தின் படப்பிடிப்பு சூர்யா இல்லாமலேயே தொடங்கி உள்ளது. நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு தடை பட வேண்டாம் என சூர்யா-40 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

சூர்யா 40 படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வடிவேலு சூர்யா 40 படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஏற்கெனவே சூர்யா- வடிவேலும் காம்போ சில்லுனு ஒரு காதல், வேல், ஆதவன் ஆகிய படங்களில் செம ஹிட் கொடுத்த காம்போ ஆகும்.

Trending

Exit mobile version