சினிமா செய்திகள்

முதன்முறையாக ஹீரோ ஆகிறார் நகைச்சுவை நாயகன் செந்தில்..!

Published

on

காமெடி நடிகர் முதன் முறையாக ஹீரோ ஆக ஒரு படத்தில் அறிமுகம் ஆக உள்ளார்.

செந்தில்- கவுண்டமணி நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் தமிழ் சினிமாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில ஆண்டுகளாக கவுண்டமணி எந்தவொரு படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் நடிகர் செந்தில் அவ்வப்போது இன்றளவும் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

கடைசியாக நடிகர் சூர்யா உடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஆன தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பட முழுக்கப் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் செந்தில் நடித்து இருப்பார். அதன் பின்னர் தற்போது ஒரு படத்தில் ஹீரோ ஆக கமிட் ஆகியுள்ளார். ‘கிடாயின் கருணை மனு’ என்ற பட இயக்குநரின் அடுத்த படத்தில் தான் செந்தில் ஹீரோ ஆக உள்ளார்.

சிறையில் ஆயுள் தண்டனை முடித்த கிராமத்துக்காரர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது போன்ற கதை அம்சத்தில் செந்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க உள்ளார்.

Trending

Exit mobile version