தமிழ்நாடு

அடுத்த மாதம் முதல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்நிலைநில் பருவத் தேர்வு முடிந்து கல்லூரிகளில் விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறைக் காலம் முடிவுக்கு வருவதால் மீண்டும் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல் கூறியுள்ளார்.

அவர் இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொறியியல், கலைக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படாது. மற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வகுப்புகள் தொடங்கி நடத்தப்படும். இவ்வாறு அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும், பள்ளிகளுகுக நடப்புக் கல்வியாண்டில் எப்படியான பாடத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம்.

seithichurul

Trending

Exit mobile version