தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகளை மூட உத்தரவு

Published

on

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனையடுத்து இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்த நிலையில் நாளை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என்று கூறிய தமிழக அரசு இந்த மாத இறுதிக்குள் செய்முறை பயிற்சி வகுப்புகளையும் செய்முறை பயிற்சி தேர்வுகளையும் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கம்போல ஆன்லைனில் பாடங்களை நடத்தி முடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version