தமிழ்நாடு
மசாஜ் செண்டரில் தகாத செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது!
![Arrest - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Arrest.jpg)
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை நீலாங்கரை அருகில் உள்ள வேட்டுவங்கோனியில் மசாஜ் செண்டர் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு மசாஜ் செய்ய வருபவர்களை சில மறைமுகமாக ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளனர். பின்னர் இந்த வீடியோவை காட்டி அந்த மசாஜ் செண்டரின் உரிமையாளரிடம் பணம் பறித்தும் வந்துள்ளனர் அவர்கள்.
அதுமட்டுமல்லாமல் வேறு சில மசாஜ் செண்டர்களிலும் இதுபோல வீடியோ எடுத்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த புகார்கள் காவல்துறைக்கு செல்ல மசாஜ் செண்டருக்கு விரைந்த போலீசார் அந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலீசார் கைது செய்ய விரைந்த போது அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். அதில் சிலருக்கு கைகள் முறிந்துள்ளன. அவர்களை கைது செய்த போலீசார் ஐபிசி 341, 294, 323, 324, 336, 392, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.