சினிமா செய்திகள்
சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது! பரபரப்பு தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் அனுப்பி வைப்பதாகவும் இதுகுறித்து சனம் செட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.
மேலும் சனம்ஷெட்டியின் புகார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருந்து சைபர் க்ரைம் போலீசாருக்கு அனுப்பட்டதை அடுத்து ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தான் சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை அடையாறு போலீசார் சற்றுமுன் கைது செய்ததாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனம்ஷெட்டிக்கு அந்த கல்லூரி மாணவர் தான் ஆபாச மெசேஜ் அனுப்பியது என்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.