தமிழ்நாடு

குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவி தற்கொலை

Published

on

கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர் குளிக்கும் போது ஒருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை மிரட்டியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்

இந்த கடிதத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியவர் யார் என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி உள்ளனர். தற்போது வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை குறித்து போலீசில் புகார் செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தைரியமாக தங்களது பெற்றோரிடம் கூற வேண்டும் என்றும் அல்லது நண்பர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் தற்கொலை என்ற முடிவுக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் வரக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்

 

seithichurul

Trending

Exit mobile version