தமிழ்நாடு

ஒருதலைக்காதல்: காமவெறியால் கல்லூரி மாணவியை குத்தி கொன்ற கொடூரன்!

Published

on

திருச்சி அருகே தங்கை முறை கொண்ட கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்த திருமணமான நபர் கத்தியால் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த பாலமுரளி கார்த்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சென்னையில் ஐடி ஊழியராக பணிபுரியும் இவர் சென்னையில் குழந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் திருமணத்துக்கு முன்னர் திருச்சி அண்டகொண்டானில் உள்ள இவரது வீட்டிற்கு அருகில் உள்ள தங்கை உறவுமுறை கொண்ட மலர்விழி மீரா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை தனது காதலை மலர்விழி மீராவிடம் பாலமுரளி கூறியும் அவர் தங்கை உறவுமுறை காரணமாக இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்தே வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்த பின்னரும் பாலமுரளிக்கு மலர்விழி மீரா மீது இருந்த ஆசை மாறவில்லை. இதனையடுத்து தனது தாயை பார்க்க மீண்டும் சொந்த ஊருக்கு வந்த பாலமுரளி தொடர்ந்து மலர்விழி மீராவுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தனது ஆசைக்கு இணங்குமாறு கல்லூரி மாணவி மலர்விழி மீராவை பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி அவரின் ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் காமவெறியின் ஆத்திரத்தில் தனது ஆசைக்கு இணங்காத கல்லூரி மாணவி மலர்விழி மீராவை பாலமுரளி கார்த்தி கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் பாலமுரளியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version