இந்தியா

ஹிஜாப் விவகாரம்…சிங்கப்பெண்ணாக முழங்கிய கல்லூரி மாணவி…வைரல் வீடியோ….

Published

on

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், நீதிமன்றத்திலும் கல்லூரியின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு ஹிஜாப் கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

girl

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

அந்த வீடியோ வெளியானதை அடுத்து அந்த மாணவியின் பக்கம் நிற்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version