தமிழ்நாடு

இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுக்கு பின்னரே கல்லூரி சேர்க்கை: உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Published

on

பிளஸ் டூ மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்தி முடித்த பின்னரே கல்லூரியில் சேர்க்கை தொடங்க வேண்டும் என மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சிபிஎஸ்சி தேர்வு ரத்து என்றும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்தும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் இந்த மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறைந்த பிறகு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் தமிழகத்திலும் பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையும் விளக்கப்பட்டது. தமிழகத்திலும் அரசு தரும் மதிப்பெண்களை ஏற்காத மாணவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடத்தி அதன் முடிவுகள் வெளிவந்து மதிப்பெண்கள் கிடைக்கும் வரை கல்லூரியில் சேர்க்கையை தொடங்கக்கூடாது என மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version