தமிழ்நாடு
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பேட்டி!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஆகஸ்ட் மாதம் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார்.
ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சிபிஎஸ்.இ மதிப்பெண்கள் வெளிவரும் என்றும் அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர் கல்லூரி சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதற்கு முன்னரே தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் அதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொறியியல் கல்லூரிகள் வழக்கமான செயற்கை முறை தொடரும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக எந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்ச்ர தெரிவித்துள்ளார். மேலும் முதல் தலைமுறை மாணவர்களுக்காக ஏற்கனவே கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.