Connect with us

தமிழ்நாடு

மேலாடையை கழற்ற சொன்ன ஆசிரியர்: தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடிதம்!

Published

on

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம் என எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை ஆர்எஸ் புரம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை மட்டும் பள்ளிக்கு வரச் சொல்லிய ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தபோது பேருந்தில் செல்லும்போது இடிப்பார்களே அது போல நினைத்துக் கொள் என தலைமையரிசியர் ஆறுதல் கூறியதாகவும் பெற்றோரிடம் சொல்லி பிரச்சினையை உண்டாக்க வேண்டாம் என்றும் மாணவிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு இந்த பள்ளி பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன் வேறு பள்ளிக்கு மாறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் யாரையும் சும்மா விட வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!