விளையாட்டு

ஒலிம்பிக்ஸில் ‘பளார் பளார்’ என அரைந்து வீராங்கனையை சூடேற்றிய கோச்!

Published

on

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெற ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன.

இந்நிலையில் ஒலிம்பிகஸில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ படு வைரலாக மாறியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஜூடோ வீராங்கனை மார்டினா ராஜ்தோஸ், அவரின் பயிற்சியாளருடன் போட்டியில் கலந்து கொள்வதற்காக களத்துக்கு வந்தார்.

ஜூடோ ஸ்டேஜில் ஏறும் முன்னர் பயிற்சியாளர் பக்கம் திரும்பினார் மார்டினா. திடீரென்று பயிற்சியாளர், மார்டினாவில் சட்டையைப் பிடித்து குலுக்கிவிட்டு, கன்னத்தில் பளார் பளார் என அரைந்தார்.

போட்டிக்கு முன்னர் அந்தப் பயிற்சியாளர், மார்டினாவை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவர் செய்த இந்த விஷயம் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

என்ன தான் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும், அதற்காக வன்முறையை ஏன் கையில் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வேறு சிலரோ, விளையாட்டுல ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இதெல்லாம் சகஜம்பபா என்று கமென்ட் அடிக்கின்றனர். நீங்கள் எந்தக் கட்சி..?

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version