தமிழ்நாடு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனையின் போது கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் இரவு நேர ஊரடங்கு குறித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைய சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக்கு பின்னர் தமிழக முதல்வரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version